4 Aug 2010

களவாடிய பொழுதுகள்



இது அல்ல அது
அணியும் ஆசைகளில்
மாறிய ஆடைகள்
உடல்தழுவ ஒளிரும்
அவள்
விரல்பட்ட கோலங்கள்

ஏக்கங்கள் தேங்கியப் பக்கங்களில்
காத்திருத்து கரைகிறது
என் விழிஇரு துருவங்கள்
உரவாடிய நிலவு விட்டுச்செல்கிறது
அவள்
இரவுகளில் நீச்சம்பெற்றக் கனவுகள்

இதயங்கள் தைத்த
ஒற்றையடிப் பாதையில்
பயணிக்கிறது நினைவுகள்
சற்றே
இளைப்பாறும் இமைகளுக்குள்
அவள்
இமை திறந்து நகைக்கிறாள்

நுனி மூக்கை நழுவி
தெறிக்கிறது
மழையின் துளிகள்
ஈரத்தின் வாசனைகளில்
அவள்
இதழ் பதிப்பின் ஸ்பரிசங்கள்

என்றாவது கடக்கும்
கவிதையெனும்
நேசத்தின் மறுமொழிகள்
மூழ்கிப்போகும் தருணங்களில்
அவள்
என்விரல் பிடித்துத்திருத்திய கொம்புசுளிகள்
 
ஆதி முதல் அந்தம் வரை
ஜனனிக்கும்
இறப்புக்கும் பிறப்புக்கும்
நடுவில்
துடிக்கும் உயிரின் நாடியாய்
அவள்
களவாடிய பொழுதுகள்....

7 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

அவள் களவாடிய பொழுதுகளை கலைக்காமல் கவனமாய் கூறிய விதம் அருமை நண்பரே..

வாழ்த்துக்கள்..

வினோ said...

நன்றி வெறும்பய... நலமா?

வினோ said...

Thanks Sweatha Sanjana

ஹேமா said...

களவும் கொடுத்துவிட்டுச் சந்தோஷப்பட்டுக் கவிதை எழுதுவது காதலில் மட்டும்தான் விநோ !

வினோ said...

ஹேமா மிக்க நன்றி... எப்படி இருக்கிறீங்க ?

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு வினோ!

//என்றாவது கடக்கும்
கவிதையெனும்
நேசத்தின் மறுமொழிகள்
மூழ்கிப்போகும் தருணங்களில்
அவள்
என்விரல் பிடித்துத்திருத்திய கொம்புசுளிகள்//

அற்புதம்..

வினோ said...

வாங்க பா ரா அண்ணே... மிக்க நன்றி அண்ணே வந்தமைக்கும் பின்னுட்டத்திற்க்கும்...