27 Nov 2011

வழியும் நினைவுகளிலிருத்து

நன்றி: fuchsintal.com
 

இடுக்குகளில் கசியும்
வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு
மெல்லிய விழி
இதழ்களை விரித்து
புன்னகையால் ஒளி
வெள்ளம் பாய்ச்சுகிறாள்
கதிரவனை கண்ட காந்தியாய்
துள்ளி எழுகிறேன்....

பின்பனியில் உறைந்துபோன
எழுத்துக்கள் - அவளின்
ஆவணி கால அரங்கேற்றங்களில்
நிரம்பி வழியும் நினைவுகளிலிருத்து
கசியத் தொடங்குகிறது..