26 Oct 2010

கிழிக்கப் படாத காகிதம் ஒன்று



விழுந்த பின்
மேலெழும்பும் குமிழிகளாய்
எரிந்துக் கொண்டிருக்கிறது

பல நடுநிசி இரவுகள்

முத்தமிடுகின்றன
முன் ஜென்மத்தின்
நினைவுகளில் சில பகுதி


விரிக்கும் பட்சிகள்
அலகுகளில் மேவ
புகைக்கும் தருணம்

மனம் கிழிக்க

வந்த  மர்கிறது
கிழிக்கப் படாத
காகிதம் ஒன்று


கோடி யாயினும்
புதிதாய் மையொழுகும்
நாமத்தின் வடிவாய்

கையெழுத்து பிரதியில்

அவன் சொல்லி
என்னுள் கொள்ளி
ஈராறு நாளில்


 

அட...
போனது போகட்டும்
விரியும் வாழ்க்கை
ஐந் தாறு நாளில்!

19 Oct 2010

பின்னொரு நாளில் முடிவில்லா கவிதை...




ஒரு மழை துளி - சிந்திய
துகள்களின் முகைகளில்
அவள் -
உதறிய
புன்னகையின் (ஜ)சரிகைகள்
புகைப்பட பிக்ஸ்சல்களாய்

எதிர்ப்பார்பின் ரகசியங்கள் தித்திக்கும்
ஓர் அந்தியில் ஜனனித்த
அவள் -
காலடி  காட்சிகளில்
கூட்டல் பெருக்கல் கற்கும்
துள்ளிய மானின் சில புள்ளிகள்

முரசு கொட்டி
முப் பணிரெண்டு பௌர்ணமிகளில்...
அவள் - விதைத்த
ஆனந்தத்தின் வலியிலும்
வலியின் ஆனந்தத்திலும்
நிலவின் மடியில்(ன்)
யாசிப்பு பிரபஞ்சம்...

துண்டு துண்டாய்

சிதறிக் கிடக்கும் (என்)
இயமப் பிறழ்வுகளில்
அவள் -
நியமப் புணர்வுகளுள்
வழிந்து நனைக்கும்
யாழின்
அரங்கேற்றங்கள்
பின்னொரு நாளில்!

12 Oct 2010

இதுவும் கடந்து போகும்...!



யன்னலில் கசியும் கருமையின்
பிறப்புக்கும் இறப்புக்குமிடையில் - என்
செவிப்பாறை சிதற
துகள்களை இரைத்துக் கொண்டிருக்கும்
அழைபேசி அவலங்களில்
நெஞ்சாங்கூடு அறுபட்ட
தொட்டா சிணுங்கி புழு
சுருண்டிருந்த  பொழுதொன்றில்
நான்
இறந்து போயிருந்தேன்...!

பெரியதோ சிறியதோ   - அறியா
நீளக் குடலுக்குள்
கழுகின் நகக்கங்குகளில் வதைப்பட்டு
கிழியும் நினைவுச் சிறகுகள்
நெளிந்து கடந்து
வளி வழி விரிய
அந்திமங்கள் இரண்டான தருணங்களில்
நான் இறந்து போயிருந்தேன்...!

அன்னக் குழாய்கள் சிதைக்கப்பட
விழி நாணல்கள் - யமியை
கதாநாயகி யாக்கிய கனாக்களை
உமிழ்த்துக் கொண்டிருக்கையில்
மரத்த மதி உரைக்கிறது
இதுவும் கடந்து போகும்...!

-------------------------------------------------------------------------------------
நான் இறந்து போயிருந்தேன் -  கவிதை போட்டிக்காக எழுதியது...


3 Oct 2010

மிதக்கும் நினைவின் கனம்...



நினைவின் கனத்தோடு விழும்
மழை துளிகளில்
கலைக்கப்படும் 
குள அலைகள்
மோதும் இருகரைகளில்
அமர்ந்திருக்கிறது துடிக்கும்
மனமிரண்டின் கால் தடங்கள்...

அவள் 
ஏக்கம் பேசும் விழிகள்
சுமக்கும் காகித கப்பல்
மேலும் கீழும் புதைய 
கரை சேருமோ
சுரந்து மிதக்கிறது பதற்றம்
 
இப்பொழுது
பெற்றவள் அப்பா என்கிறாள்
பெற்றவன் அம்மா என்கிறான்
தேவை ஒன்றாகிறது
இருவருக்கும்...