28 Nov 2010

பிறக்கிறது ஓர் மாண


மூன்றாம் நாள்
நிலவொன்று 
எழும் அந்தி வேளையில்
வீசும் மந்திர புன்னகையில்
பிறக்கிறது ஓர் மாண

பொழியும் வெள்ளை
பனி திரள்களை
ஆரத்தழுவும் மனசு
கரம் விரித்து
அள்ளுகிறது அவள்
கற்றுக்கொடுக்கும் நம்
மொழியின் புதிய பரிமாணங்களை...

மொட்டைமாடி  நிலவும்
அம்மா மடி சோறும்
இப்பொழுது
கணினி வழி யூடூபும்
கரண்டி வழி கார்ன் ப்லேக்சுமாய்
மாறிப் போன காவியங்கள்
இங்கே ஆயிரம் ஆயிரம்.....

பிறந்தநாள்  காணும் என் அன்பு நட்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...

டிஸ்கி : மாண - யாழினின் மொழியில் வேண்டாம் என்று பொருள்....

25 Nov 2010

பாட்டு பாடவா...

பத்துபாட்டு அதுவும் பெண்மனசை பெண்குரலில் வெளிப்படுத்தும் கானம் எழுத என்னை அழைத்த நீரோடை மலிக்கா மற்றும் கலியுகம் தினேஷ்குமார் அவர்களுக்கு என் நன்றிகள்....

இதோ எனக்கு பிடித்த பாடல்கள்....

படம்: மெல்ல திறந்து கதவு 
பாடியவர்:  சித்ரா

படம்: மெல்ல திறந்து கதவு 
பாடியவர்: ஜானகி அம்மா...

படம்: நீங்கள் கேட்டவை
பாடியவர்: ஜானகி அம்மா...

படம் : முதல் மரியாதை
பாடியவர் :  ஜானகி அம்மா...

படம்: சிந்து பைரவி
பாடியவர்: சித்ரா

படம்: ஜீன்ஸ்
பாடியவர்: நித்யஸ்ரீ மகாதேவன்

படம்:சத்யம்
பாடியவர்:சாதனா சர்கம்

படம்: பார்த்திபன் கனவு

பாடியவர்: ஹரிணி

படம்:கீரிடம்
பாடியவர்:சாதனா சர்கம்

படம்: ஜூலி கணபதி
பாடியவர்: ஸ்ரேயா க்ஹோசல்


உங்களுக்கு  பிடிக்கும் என்று நம்புகிறேன்.....இதை தொடர நான் அழைக்கும் நண்பர்கள் - சினிமா விமர்சகர்கள்....



19 Nov 2010

மிளிர்கிறது


பறந்து வந்த
அந்த முன்னிரவில்
வேர் அசைக்க
தலையாட்டும் மரக்கிளையில்
மழை துளிகள்
சுமக்கும் இலைகள்
முன்னின்று  வரவேற்கிறது
இளங்குயில்களை...

சன்னல்  கண்ணாடியில்
புகை பரவும்
குளிர் இரவில்
பிஞ்சு
விரல்கள் வரைந்த
புன்னகை பொம்மையில்
மிளிர்கிறது யாழின்
இன்பம்....

பனிரெண்டு சுவர்களுக்குள்

தொடங்கப்பட்ட
புதிய அத்தியாயத்தில்
சின்ன
கொலுசுகளில்
பட்டுத் தெறிக்கும்
அவளின்
அப்பா அப்பா
செல்ல சிணுங்கல்களில்
மிளிர்கிறது என்
இன்பம்.....