கவிதைகளின் வழிகளில்
கனவுகளை வைக்கவில்லை
காலமெல்லாம் கலையாமல்
கரைந்திருக்கும்
நட்பை அல்லவா விதைத்தோம்
அன்று
வள்ளுவனும் இளங்கோவும்
வடித்த உறவுக்கு
இன்றும்
கோடானக் கோடி தோழமையின் அணுக்கள்
உயிர்க் கொடுத்துக்கொண்டிருக்கிறதே....
பிறக்கையில் தாய்ப்பாலும்
நடக்கையில் நட்பின்பாலும்
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்...
இலையுதிர் பொழுதுகளும்
இமை மூடும் தருணங்களும்
மெல்ல வந்து போகலாம்
நெஞ்சினில் புதைந்த மலருக்கு
உரம் ஊற்றிய
அன்பின் நேசக்கரங்களே
உங்கள் நினைவுகளுடனே
பூக்கும் இந்த
பூவிலிருந்து உதிரும்
ஓவ்வொரு இதழ்களும்
சிநேகத்தின் உதிரங்களே......
--------------------------------------------------------------------
நட்பின் அன்பு உறவுகளுக்கு என் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
7 comments:
அருமையா வரிகள் நண்பா...
என் இனிய நண்பனுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
ஏன் ச்நேஹதிற்குரிய தொழற்கு
இனிய நட்புறவு தின வாழ்த்துக்கள்!
உங்களுடைய அன்பிற்குகும் பாசத்திற்கும் நன்றிகள் பல பல!
கவிதை அழகாக வடிதுள்ளிர்
முதல் பத்தி எப்படி வடிதிர்கலாம்..
வாழ்கையின் பாதையில்
கனவுகளை வைக்கவில்லை
காலமெல்லாம் கலையாமல் கரைதிருக்கும்
நட்பைஎல்லவா விதைத்தோம்
நண்பர் தின வாழ்த்துக்கள் தம்பி ..
கவிதை நன்றாக வந்திருக்கிறது ...
கவிதை அருமை :)
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா
நண்பர்கள் தின வாழ்த்துகள்
நன்றி நண்பர்களே....
Post a Comment