3 Jul 2010

சலனமில்லாமல் கன்னிப்பார்வையை

ஒரு முறை வீசுகிறாய்
சன்னல்களில் சலனமில்லாமல்
மோகம் கொண்ட கன்னிப்பார்வையை
சோ வென மழையாய்...
நனைந்த படி நான் ‍
நகம் கடித்தபடி நீ.....

யா‌ழினை வாசிக்கிறாய் ‍‍- உந்த‌ன்
காந்த‌ புன்ன‌கைக‌ளில்...
ப‌ர‌தேச‌ம் போன‌ பிச்சைக்கார‌னாய்
ப‌ர‌வ‌ச‌ப்ப‌டுகிறேன் நான்...

உன் ம‌வுன‌ உரையாட‌ல்க‌ள் - என்
விலாவில் உதிர‌ம் உருஞ்சுகின்றன‌!
ஒன்று
உன்னுள் அணைத்துவிடு - அல்ல‌
பிரிவின் ப‌ரிவ‌ர்த்த‌னைக‌ளுக்குள்
எனை புதைத்துவிடு......