7 Jan 2011

முதல் பனி - 3

 (காரையார் அணை, பாபநாசம்)

ஒரு சந்திப்பையும், தொடர் நிகழ்வுகளையும் எப்படியெல்லாம் சொல்லலாம்......

விடிகாலை தேனீர் புகை
குழந்தையின் முதல் அழுகை
சன்னல் ஓர மழைத் துளி
ஒரு புத்தகம் கொடுக்கும் மூட முடியா பக்கம்
கனிந்த பழத்தின் ருசி

இவை எதுவுமில்லாமல்,
மெல்லிய வலியுடன் உறையும் உணர்வு.....

ஆரத்தழுவிய மனசு கங்காரு குட்டியை போல் அவரது நட்பின் வயிற்றில் இடம் பிடித்து அமர்ந்து கொண்டது. பிள்ளையின் தொண்டைக்குழி தேன் சுவை இன்ப ரேகைகள் என்னுள் பரவக் கண்டேன்.

நகர்ந்து கொண்டிருக்கும் நொடி முள்ளை என் நினைவுகளுக்குள் சொருகி விட்டேன். பிரசவம் பார்த்திருந்த உறவுக்குள் நட்பும் ஒட்டிக் கொண்டது. இரு உள்ளங்களும், மூன்று உடல்களும் அந்த பொழுதின் புதையலுக்குள் கரைந்துக் கொண்டிருந்தன....

குடும்பம்  வந்து போகிறது. தொழில் வந்து போகிறது. இடையிடையே எழுத்தும் வந்து போகிறது. இவை அனைத்தும் கவிதைகளாய் பூத்துக் குலுக்கும் ஒரு நாள்.

தோசையும், கெட்டி சட்னியும், பூரியும் கூடவே ஒட்டிக் கொண்டே பில்லும் "வணக்கம் அண்ணே"ங்களுக்கு நடுவில்.

நிகோடின் புகைகளுக்கு மூன்று நான்கு முறை உயிர் கொடுத்தாகி விட்டது.

உறவுக்கு வித்திட்டவள் புது ராஜ்ஜியம் நோக்கி நகர்கிறது ஆவல். பெற்றெடுத்து கொடுத்தவனும் தமையனா மாறியவனும் வழி மேல் விழி வைத்து வாசல் தேடி பயணிக்கின்றனர்.

தங்கையின் முகம் காண என் முன்னே சென்று விட்டது மனசு. அவளும் புன்னகைகளை விரித்து பாசம் கொட்டுகிறாள். அங்கு அண்ணனுக்கும், தங்கைக்குமாய் ஒரே கவிதை பதியப் படுகிறது........

அறிமுகப் படலம் நடக்கிறது. 

இரண்டு மாதங்களாய் சேர்த்து வைத்த பாசக் குமிழிகளை ஒவ்வொன்றாய் உடைத்து விதைத்துக் கொண்டு வருகிறேன்... நினைவுகள் நிகழ்வுகளாய் உருமாறிய தருணங்கள் அவை.....

வீட்டிற்கு செல்கிறோம். விவரம் பரிமாறப்படுகிறது. தாய் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார். அன்னையின் அன்ன வாசனை மூக்கு நுனியின் விலாசம் அறிந்து அமர்ந்து கொண்டது....

நிமிடங்கள் ரெக்கை கட்டி பறக்க அங்கும் இங்குமாய் மன ஓடத்தில் கோப்பைகளுக்குள் நிரம்பிக் கொண்டிருந்தோம்....

பசியின் அறைகூவலில் அடுக்கப் பட்ட ஆகார பைகளை திறந்த பின், தாய் அவள் திசை பார்த்து பாசத்தில் நன்றியில் வணங்கியது.

பசி மறைய மனம் மகிழ தொடர்ந்தது பயணம்... 




பாண தீர்த்த அருவியும், 
காரையார் அணையும் 
தண்ணீர் இல்லாமலும்  
நிறைந்தே இருந்தது 
பா ரா சத்தால்.....



34 comments:

எஸ்.கே said...

//
விடிகாலை தேனீர் புகை
குழந்தையின் முதல் அழுகை
சன்னல் ஓர மழைத் துளி
ஒரு புத்தகம் கொடுக்கும் மூட முடியா பக்கம்
கனிந்த பழத்தின் ருசி

இவை எதுவுமில்லாமல்,
மெல்லிய வலியுடன் உறையும் உணர்வு.....//

அருமையான உணர்வு!

எஸ்.கே said...

நெகிழ்ச்சியான பயணம்! நட்பு தொடரட்டும்!

வினோ said...

நன்றிங்க எஸ் கே...

க ரா said...

நெகிழ்வான எழுத்து வினோ ... கொடுத்து வச்சவ்ர் நீங்க பா.ரா வ தரிச்சிருக்கீங்க :) பகிர்விற்கு நன்றி.. மாம்ஸ் எப்படி இவ்வளவ்வு இளமையா இருக்காருன்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்களேன் :)

கவி அழகன் said...

புடம் போட்ட எழுத்துக்கள் வாசிக்க அருமையாக உள்ளது நண்பா
உங்கள் எழுத்து நடை வித்தியாசமானத உள்ளது வாழ்த்துக்கள்
அனைத்து வரிகளும் அற்புதம்

Philosophy Prabhakaran said...

உங்களுடைய எழுத்து நடை, இலக்கிய நயம் வியக்க வைக்கிறது... வாழ்த்துக்கள்...

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு வினோ...

(போட்டோல அப்பா உங்களை விட வயசு குறைவா தெரியுறாரு. ஜாக்கிரதை )

தமிழ்க்காதலன் said...

இனிக்க நினைக்கும் அன்பு தோழனுக்கு, உங்களின் எழுத்தில் உங்களை காணும் பதிவு இது. மிக ஆழமாய் உங்களின் நேசம் வெளிப்பட்டிருக்கு. அருமையான பதிவு. அன்பு பா.ரா வுக்கு என் அன்பை சொல்லுங்கள்.

dheva said...

வினோ..........

மழையில் நனைந்து கொண்டே போய்............கப்பல் செய்து ஓடும் தண்ணீரில் விட்டு விட்டு......உடையும் தலையும் நனைந்தபடி ஓடி வீட்டுக்குள் வந்து வேடிக்கை பார்க்கும் ஒரு பரவசம்.......எனக்கு இந்த கட்டுரையின் வழியே பயணிக்கும் போது.....

தம்பியும் சித்தப்பாவும்....சந்திச்சு இருக்கீங்க.....மனம் எப்படி சிலாகிக்காமல் இருக்கும்....நீயே சொல்லுப்பா!

arasan said...

நல்ல பதிவு நண்பரே

தினேஷ்குமார் said...

எழுத்து நடை அருமை தல ....
இடைவிடாது பொழியும்
நட்பின் மழைதனில்
அலைபாயும் நினைவுகளுடன்
நனைகிறோம் வரிகளில்

ஹேமா said...

பாரா அண்ணாவை உங்க எழுத்திலயும் படத்திலயும் பார்த்து சந்தோஷமாயிருக்கு வினோ !

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான நடையில் அழகாக உள்ளது நண்பரே..

தொடரட்டும் தங்களது பயணம் இனிதாய் இனிமையாய்....

பா.ராஜாராம் said...

வினோ ராஸ்கல்,

நடத்து.. :-)

NaSo said...

தங்களது இனிய பயணம் தொடரட்டும்!!

சிவாஜி சங்கர் said...

:)

வினோ said...

நன்றிங்க ராமசாமி.. கேட்போம்..

வினோ said...

நன்றி யாதவன்..

வினோ said...

நன்றி பிரபாகர்..

வினோ said...

நன்றி கமலேஷ்...

வினோ said...

நன்றி தமிழ்க் காதலன்

வினோ said...

நன்றிங்க தேவா அண்ணா..

வினோ said...

நன்றி அரசன்..

வினோ said...

நன்றி தினேஷ்..

வினோ said...

நன்றி ஹேமா சகோ..

வினோ said...

நன்றி ஜெய்...

வினோ said...

நன்றி நாகராஜாசோழன்

வினோ said...

நன்றி சிவா..

சிவகுமாரன் said...

\\குடும்பம் வந்து போகிறது. தொழில் வந்து போகிறது. இடையிடையே எழுத்தும் வந்து போகிறது. இவை அனைத்தும் கவிதைகளாய் பூத்துக் குலுக்கும் ஒரு நாள்.//

மிகச் சரளமான நடை. அருமை.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையான நடையில் அழகாக உள்ளது...
தொடருங்கள் வாழ்த்துக்கள் வினோ..

Unknown said...

//விடிகாலை தேனீர் புகை
குழந்தையின் முதல் அழுகை
சன்னல் ஓர மழைத் துளி
ஒரு புத்தகம் கொடுக்கும் மூட முடியா பக்கம்
கனிந்த பழத்தின் ருசி//

இதிலிருக்கும் ஒவ்வொன்றும் நல்ல ரசனை.
கனிந்த பழத்தின் ருசி.. படிக்கும் போதே இனிப்பாக இருக்கிறது.
பயண பகிர்வுக்கு நன்றிகள்..

Unknown said...

//விடிகாலை தேனீர் புகை
குழந்தையின் முதல் அழுகை
சன்னல் ஓர மழைத் துளி
ஒரு புத்தகம் கொடுக்கும் மூட முடியா பக்கம்
கனிந்த பழத்தின் ருசி//

இதிலிருக்கும் ஒவ்வொன்றும் நல்ல ரசனை.
கனிந்த பழத்தின் ருசி.. படிக்கும் போதே இனிப்பாக இருக்கிறது.
பயண பகிர்வுக்கு நன்றிகள்..

Unknown said...

இலக்கியமா செதுக்கி, செதுக்கி எழுதுகிறீர்கள்..

சிவகுமாரன் said...

விடுப்பு ஏனோ வினோ ?