25 Jul 2010

பெல்பாஸ்ட் -‍ மேன்செஸ்டர் - பெல்பாஸ்ட் : 2

அன்பின் நேசக்கரங்களுக்கு பஞ்சம் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு இல்லீங்க...

நம்ம பயணத்தின் இரண்டாவது பகுதி, என் மீது நண்பர்கள் மற்றும் அவர்களின் துணைவியார் தூவிய அன்பின் மழைத் துளிகளே...

ஒரு தாய் வயிற்றில் பிறக்காத சகோதரிகள் அவர்கள். அதுவும் தங்கை உறவு தாங்க..(கொஞ்சம் உருகி விடுவேன், இந்த அண்ணன் தங்கை உறவுக்கு. நீங்களே சொல்லுங்க யாரு தான் உருக மாட்டாங்க?)


சனிக்கிழமை 10th சூலை, காலையில மேன்செஸ்டரில் இறங்கி வீட்டுக்கு போகும் போதே, நம்ம வயித்துக்குள்ள இருக்கிற கோழி நூறு தடவை கூவிருச்சு....  :(

போனவுடன் ஒரு வணக்கம் போட்டா, சுடச்சுட உப்புமா :) என்ன சுடச்சுடன்னு விசாரிச்சா நீங்க பசியோட வருவீங்கன்னு தெரியும், சூடா இருந்தா கொஞ்சம் நிறைய சாப்பிடுவீங்கன்னு இப்போ தான் செஞ்சேன் ஒரு தங்கையிடமிருந்து வந்து விழுந்த முத்து. எல்லோருமே இந்த பதிலை சொல்லுவாங்கலே, என்ன பெருசா? என்று நீங்க நினைக்கிறது  தெரியுது... என்ன முக்கியமுன்னா, காஞ்சு போன கருவாடு மாதிரி வெந்ததையும் வேகாததையும் பல நாளா சாப்பிட்ட எனக்கு, இந்த மாதிரி பதில் முத்து தாங்க...

இதுல இன்னொரு விசயம் என்னனா, சோறு போட்ட ஆத்தாவை ;) அப்ப தான் முதன்முறையாய் சந்திக்கிறேன். அந்த கணத்தில் ஆரம்பிச்ச அன்பின் தூறல்கள் தாங்க இந்த பதிவின் விதைகள்....

ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தா,

பிடித்துப்போடும் சமையல் வாசனை
கேட்டு செய்த உணவுகள்
பக்குவமா பரிமாறும் கரங்கள்......
பறந்து போன நாட்களை திரும்பிபார்த்துக் கொண்டிருக்கிறேங்க...

சனி போய் ஞாயிறு Blackpool போனோம் (அது தனியா)

அரவணைப்புகளுக்கு எங்கும் எப்பொழுதும் இருக்குங்க....

திங்கள், செவ்வாய் ஒக்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்க முடியாத வேலை பளு.....

காலை வெகுநேரம் தூங்க விட்டு
எழுந்தவுடன் உணவு கொடுத்து
அப்பப்ப பசி போக்க
சிற்றுண்டிகள் பரிமாறி...
 
இப்படியாக அழகாய் நாட்களை சுவாசித்துக் கொண்டிருந்தேங்க...

தினங்கள் ஓடிபோய், கிளம்பும் தருணம், மறைக்க முடியா பிரிவின் வாசனை முகர்ந்து கொண்ட முகங்களை பார்க்கும் பொழுது பொங்கிய உணர்வுகளே இந்த பதிவு...

இப்போ அவுங்களுக்கு புரியற மாதிரி ஆங்கிலத்தில்.... ஒரு சின்ன நன்றி உரை... 

They are my friends…yep… still they are like my bros and sisters from different mothers. It may be a bit emotional….but I don’t find anything unusual… Way the days treated me was amazing, largely due to the level of affection these guys poured on me. I have no wonderful words or poems to explain my feelings on this.  Just a Thank you deep from my heart…

Thank you Guys…. What a wonderful time u have gifted me……

ஒன்னும் இல்லிங்க பெருசா... ஆனா, மகிழ்ச்சியை பகிரும் பொழுது பெருகும் பாருங்க அதுக்காகவே எழுதுணங்க...

1 comment:

Kalidoss said...

இது வரை நன்றாகவே கிழித்துள்ளிர்கள்.ஒட்டு போட்டு தைக்கவேண்டிய பட்டு.பகிர்வுகள் தொடர என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
செண்பகதாசன்