17 Jul 2010

பெல்பாஸ்ட் -‍ மேன்செஸ்டர் - பெல்பாஸ்ட் : 1

எழுதாம இருக்க முடியலிங்க.. நாலு நாள் ஊருக்கு போய் உங்க குடும்பத்தை பார்த்தா எப்படி எழுதாம இருக்க முடியும்? என்னடா இவன் இத்தனை வருசமா எழுதின மாதிரி பேசறானேன்னு கேட்கிறீங்களா? சும்மா! அறிமுகம் வேணுமில்ல..

போன வாரம் நாலு நாள் (10 -13 July), இந்த ஊரு, அதுதாங்க நம்ம பெல்பாஸ்ட்ல‌ (எப்ப நம்ம ஊரு ஆச்சுன்னு கேட்கிறீங்களா, இருக்குற ஊரெல்லாம் நம்ம ஊரு தாங்க) ஒரு பிரிவு ஊர்வலமா போய் சுதந்திர நாள் கொண்டாடினாங்க பிரிவுனலே தடுக்க இன்னொரு பிரிவு இருக்கனுமே? தடுக்க, கலவரம், உயிர் பலி..

இதுல நான் இருக்கிற இடம் ரொம்ப மோசமான இடம். வேற வழியில்லாம, உயிரை உடலோட விட்டு வைக்க, என் தோழர்கள் இருக்கிற மேன்செஸ்டருக்கு பயணம்.. இவுங்க தாங்க நம்ம குடும்பம் இங்க.

பத்தாம் தேதி காலையிலே நண்பர் ஒருவரோட விமான நிலையம் போனா, அங்க ஆரம்பிச்சது விளையாட்டு.. online check-in பண்ணி boarding pass எடுத்து போனா, scan ஆகல‌ போய் வேற வாங்கிட்டு வாங்கன்னு அணுப்பிட்டாரு நம் அருமை சுங்க அதிகாரி... நில்லு வரிசையில!எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்தாங்க, என்னடா இவன் pass யை கையில வைச்சுகிட்டு வரிசையில நிற்கிறானே என்று... இதுக்கு நடுவுல, நமக்கு வேற படபடப்பு...கவுன்டர் அக்காகிட்ட pass வாங்க பத்து பவுண்டு (700 ரூபாய்) மொய் வைக்கனுமே :( (கொள்ள தாங்க, என்ன பண்ண‌ முடியும்).. அங்க போனா, அழகா சிரிக்கிற அக்கா என்ன பார்த்து முரைக்கிற மாதிரியே இருந்திச்சு..

ஒரு வழியா அத வாங்கிட்டு security check முடிச்சு ஒரு மணி நேரம் நிலையத்தை சுத்தி விமானம் ஏறி உள்ளே போனா நம்ம இருக்கையில ஒரு அம்மாவும் குழந்தையும் (குழந்தை இருந்ததுனால தாங்க அம்மான்னு சொல்ல வேண்டியதாப்போச்சு) .

மாத்தி உட்கார வெச்சா, அந்த குழந்தைக்கு கோவம் போல ஜன்னல் பக்க இருக்கை ஏன்டா தருலேன்னு அப்பப்ப எட்டி உதைச்சுகிட்டே வந்தாங்க. அந்த அக்காவுக்கும், இல்ல இல்ல, அந்த அம்மாவுக்கும் உள்ள சந்தோசமான்னு தெரியில....இரண்டு தடவை பார்த்தாங்க, அப்புறம் அவுங்களும், உதைச்சா பரவாயில்லையுன்னு விட்டுடாங்க :( .
இத ஏன் சொல்றேனா, இப்ப பக்கத்தில இல்லாத என் செல்ல பாப்பா, கூட பறப்பாங்கில்ல..அவுங்க உதைச்சா, நம்ம வீட்டுகாரம்மா இப்படி தான் மனசுக்குள்ள சிரிச்சுகிட்டே அந்த பக்கம் திரும்ப மாட்டாங்க? நாம தான் இப்படி செய்ய முடியல, நம்ம குழந்தை செய்யுறாலேன்னு...

இப்படி கனத்த இதயத்தோடு ஜன்னல் வழியே பார்த்தா....மேகம்! முதன் முறையா மேல இருந்து ரசிச்சேன் (பல முறை பார்த்திருக்கிறேன், ஆனா ரசிச்சதில்ல). நம்ம திருப்பூர், ஈரோடு பக்கம் பஞ்சு ஆலைங்களுக்கு போனா, உதிர்ந்த பஞ்சை தரை பூரா கொட்டி வெச்சா எப்படி இருக்கும், அது மாதிரி இருந்துச்சுங்க. நினைவுகள் நம்ம தமிழ் மண்ணுக்கு ஓடி வந்திருச்சு... என்னையும் காத்தோடு தூக்கிட்டு வந்து உட்கார வெச்சுருச்சு... அப்ப தாங்க இந்த வரிகள்...


நீ பிய்த்துப் போட்ட
கரடி பொம்மையின் தோல் நுனிகளா?
ஆங்கங்கே உதிர்த்து விட்ட‌
நாலு பல் வெள்ளை புன்னகைகளா?

எதுவாகட்டும் ‍ செல்லமே
நினைவுகளை விதைத்துவிட்டாய்
யாழினை வாசித்துக்கொண்டிருக்கிறேன்..

இங்கே எதுக்கு/எப்படி கவிதைன்னு பார்க்கிறீங்களா? கோவை பக்கம் வந்திட்டேன்..என் யாழினி எண்ணம் இல்லாமலா?

இப்படியே இரண்டு மணி நேரம் போச்சு! மேன்செஸ்டர் வந்துச்சு... அட பாவி இரண்டு மணி நேர பயணத்திற்கே இத்தனை மொக்கையினா நாலு நாளைக்கு எத்தனைன்னு நீங்க அடிக்க வரது தெரியுது.

அதுனால இதன் தொடர், அடுத்த பதிவு... ஆங்கிலத்தில்...ஏன்னா நம்ம நண்பர்களுக்கும் அவர்களின் மனைவிகளுக்கும் தமிழ் தெரியாது...

அவுங்க என்னை பார்த்துக்கிட்ட நெகிழ்ச்சிக்கு சமர்ப்பணம்..
 
இப்போதைக்கு இது போதுமா?

5 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமையான பதிவு!!

பாலா said...

நல்ல பதிவு நண்பா .
தொடர்க ...

வினோ said...

நன்றி பல @ உலவு.காம் , நண்பா பாலா...

Unknown said...

உங்க கவிதை எனக்கு பிடிச்சிருக்கு தம்பி...

வினோ said...

மிக்க நன்றி KPR அண்ணே....