26 Oct 2010

கிழிக்கப் படாத காகிதம் ஒன்று



விழுந்த பின்
மேலெழும்பும் குமிழிகளாய்
எரிந்துக் கொண்டிருக்கிறது

பல நடுநிசி இரவுகள்

முத்தமிடுகின்றன
முன் ஜென்மத்தின்
நினைவுகளில் சில பகுதி


விரிக்கும் பட்சிகள்
அலகுகளில் மேவ
புகைக்கும் தருணம்

மனம் கிழிக்க

வந்த  மர்கிறது
கிழிக்கப் படாத
காகிதம் ஒன்று


கோடி யாயினும்
புதிதாய் மையொழுகும்
நாமத்தின் வடிவாய்

கையெழுத்து பிரதியில்

அவன் சொல்லி
என்னுள் கொள்ளி
ஈராறு நாளில்


 

அட...
போனது போகட்டும்
விரியும் வாழ்க்கை
ஐந் தாறு நாளில்!

42 comments:

தினேஷ்குமார் said...

//முத்தமிடுகின்றன
முன் ஜென்மத்தின்
நினைவுகளில் சில பகுதி//

நல்லா இருக்குங்க வினோ

செல்வா said...

நான்தான் முதலா ..?

செல்வா said...

//அட...போனது போகட்டும்விரியும் வாழ்க்கைஐந் தாறு நாளில்!//

விரியட்டும் விரியட்டும் ..!!

கவி அழகன் said...

நல்லா அனுபவிச்சி எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

வருணன் said...

நண்பா எனக்கு உண்மையில் இக்கவிதையின் பாடுபொருளை புரிந்து கொள்ள முடியவில்லை. சமயமிருந்தால் விளக்குங்கள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லா இருக்கு..

Unknown said...

கிழித்துப்போட வாய்ப்பளிக்காத சந்தர்ப்பங்களால் நிரப்பப்பட்ட காகித படிவங்கள் மனசில் உரசிப்போகின்றன சில தீப்பொறிகளை,,

sakthi said...

அபாரம் வினோ

அன்பரசன் said...

கவிதை அருமை.


ஒரு சிறு பிழை.
//வந்த மர்கிறது//
இடைவெளி இருப்பதால் அர்த்தம் வரவில்லை.

மதுரை சரவணன் said...

//அவன் சொல்லி
என்னுள் கொள்ளி
ஈராறு நாளில்//

அருமை. வாழ்த்துக்கள்.

எஸ்.கே said...

அருமையான வரிகள்!
சிறப்பான கவிதை!
வாழ்த்துக்கள்!

Anonymous said...

நல்லா இருக்கு வினோ..

காமராஜ் said...

அருமை வினோ

"ராஜா" said...

உங்க கவிதையில ஏதோ அர்த்தம் இருக்குன்னு தெரியுது ஆனா என்ன அர்த்தம்னுதான் புரியல...

வினோ said...

நன்றி தினேஷ்..

வினோ said...

நன்றி செல்வா..

வினோ said...

நன்றி யாதவன்...

வினோ said...

ஆமா கே ஆர் பி அண்ணா, அப்படி தான் இருக்கு இப்போ..

வினோ said...

நன்றி ஜெய்...

வினோ said...

@ வருணன் - நண்பா, ஒரு கடிதம் கையில் இருக்கு, கிழித்துப்போட மனசு சொல்லுது, ஆனா, முடியல :( அதுக்கு தான்...

வினோ said...

நன்றி சக்தி...

வினோ said...

நன்றி மதுரை சரவணன்..

வினோ said...

நன்றி எஸ் கே

வினோ said...

நன்றி பாலாஜி...

வினோ said...

நன்றிங்க காமராஜ் அண்ணா

வினோ said...

நாம பேசுவோம் ராஜா..

தமிழ்க்காதலன் said...

உங்கள் கிழிக்கப் படாத காகிதம் கிழித்த என் மனப் பக்கங்கள் அதிகம் வினோ. புரட்டிப் போடும் ஞாபகங்களில்.... துளிர்த்திருக்கும் விழிகளில்.... உன் வரவுக்கான காத்திருப்புகள்...!!

Sriakila said...

//விழுந்த பின்
மேலெழும்பும் குமிழிகளாய்
எரிந்துக் கொண்டிருக்கிறது

பல நடுநிசி இரவுகள்

முத்தமிடுகின்றன
முன் ஜென்மத்தின்
நினைவுகளில் சில பகுதி
//
என்னைய மாதிரி பயப்படுற அப்பாவிகளுக்கு திகிலக் கிளப்பாதீங்க..

Sriakila said...

//விழுந்த பின்
மேலெழும்பும் குமிழிகளாய்
எரிந்துக் கொண்டிருக்கிறது

பல நடுநிசி இரவுகள்

முத்தமிடுகின்றன
முன் ஜென்மத்தின்
நினைவுகளில் சில பகுதி
//
என்னைய மாதிரி பயப்படுற அப்பாவிகளுக்கு திகிலக் கிளப்பாதீங்க..

வினோ said...

விரைவில் சந்திப்போம் தமிழ்க் காதலன்...

வினோ said...

அப்படியெல்லாம் இல்லைங்க Sriakila

தினேஷ்குமார் said...

வணக்கம் வினோ
எங்க ஆளையே காணாம் எங்கேருக்கிங்க வினோ ........

இனிய தீபவொளி திருநாள் வாழ்த்துக்கள்

ஹேமா said...

வினோ..சுகம்தானே.

கவிதை அற்புதம்.அனுபவித்துப் பின் சலித்துப் பின் மனதைச் சமாதானப்படுத்திக்கொண்ட வரிகள்.

ஜெயசீலன் said...

நல்லா இருக்கு வினோ.

வினோ said...

நன்றி தினேஷ்... இந்தியா போயிருந்தேன்..

வினோ said...

சுகம் ஹேமா... நீங்கள் சுகம் தானே?

வினோ said...

நன்றி ஜெயா...

ம.தி.சுதா said...

ஃஃஃஃகோடி யாயினும்
புதிதாய் மையொழுகும்
நாமத்தின் வடிவாய்ஃஃஃஃ
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
mathisutha.blogspot.com

Anonymous said...

“கிழிக்கப்படாத காகிதம் ஒன்று“ தலைப்பிற்கேற்ப கவிதை வரிகளும் அருமை.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

வினோ said...

நன்றி ம.தி.சுதா...

வினோ said...

நன்றி இந்திரா...

அருண் பிரசாத் said...

நல்லா எழுதி இருக்கீங்க....

ரசித்தேன்