29 Jun 2010

ம‌ரித்துப்போகும் உயிர‌ணுக்க‌ளும்

வெற்றிடங்களில் தொலைத்த இரவுகள்
இமைகளுக்கிடையில் பகடையாடும் ஊமைவிழிகள்
த‌கித்து உமிழ்கிற‌து நெஞ்ச‌ம்

புரிய‌கூடும் -
என் கால்க‌ளை க‌ட்டிய‌ணைக்கும் பிஞ்சு விர‌ல்க‌ளை
க‌ன‌வுக‌ளில் க‌விதைக‌ள் வ‌ரையும் ம‌ழ‌லை புன்ன‌கைக‌ளை
காணா த‌ருண‌ங்க‌ள் -

உச்ச‌ந்த‌லையில் ம‌ரித்துப்போகும் உயிர‌ணுக்க‌ளும்
உள்ள‌ங்காலில் புதைந்துபோகும் நிக‌ழ்வுக‌ளும்
விலாவை உரித்துப்போட்ட‌

நிராக‌ரித்த‌லின் வ‌லி
ஒர் நாள்
உன‌க்கும்!

6 comments:

Unknown said...

நல்ல கவிதை தொடர்ந்து எழுதுங்கள் ..

வினோ said...

நன்றி நண்பர் செந்தில் அவர்களே...

cheena (சீனா) said...

அன்பின் வினோத் நிலா

கவிதை ந்ன்று

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல கவிதை தொடர்ந்து எழுதுங்கள் ..

மங்குனி அமைச்சர் said...

வலைச்சரம் பார்த்து வந்தேன் , நல்லாருக்கு தொடருங்கள்

வினோ said...

அன்பிர்க்கு நன்றி @ மங்குனி அமைச்சர், cheena (சீனா), வெறும்பய.