பனி என்றால்
அழகு, சந்தோசம், இனம் புரியா ஆனந்தம்.
உங்கள் முதல்
கவிதை
சம்பளம்
காதல்
பிள்ளையின் முதல் மொழி , அம்மா/அப்பா, முதல் கிறுக்கல்
முத்தம்....
இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி பல நிகழ்வுகளை நினைவில் நிறைத்து சுவாசிக்கலாம் இன்பத்தை.
பதின்ம வயதில் கிறுக்கத் தொடங்கிய எனக்கு, எழுத்தைப் பற்றியும், மொழியை பற்றியும் பெரிய ஞானம் இருந்ததில்லை (இப்போ மட்டும் என்னவாம் ன்னு கேட்காதீங்க ப்ளீஸ்).
நாம் காதலிக்கும் பெண் நம்மை காதலிக்க,
காதலின் வேகம் கூடுமே அப்படி,
எழுத்தின் வலிமையை உணர்ந்த தருணங்களில் எழுதும் வேகம் கூடியது. அதன் வழியே நட்புகளும் அமையப்பெற்றன உங்களைப் போல.
நான் அனுபவித்த முதல் பனி எப்படி ஓர் அழகிய உணர்வோ,
அதையே பிரதி எடுக்கும்
சில மனிதர்களின் சந்திப்பும், கை குலுக்கல்களும்.
இப்போ உங்களுக்கு புரிந்திருக்குமே, உங்கள் கணிப்பு சரிதான்...
இனி அப்படியான ஓர் அருமையான முதல் சந்திப்பு...
அன்று திருவிழா...
பட்டாசுகள் காதின் ஆழம் வரை சத்தத்தின் வலிமையைக் கொண்டு சென்ற களைப்பில் உறங்கப்போகும் அந்த இரவு வேளையில்,
ரோட்டோரக் கடையை திறக்க வைத்து, நாங்கள் சில பல ரொட்டிகளை உள்ளே தள்ளிய பின், உருமத் தொடங்கியது டாடாவின் குடும்பக் கார் ஒன்று.
ஏதோ பார்க்காததை பார்ப்பது போல் நெடுக, வழியை பார்த்து பார்த்து தேட வைத்து விட்டார் வருண பகவான். எங்களின் நிழலாய் துரத்திக்கிட்டே இரண்டு மணி நேரம் வந்தார்...
மழையுடன் பாதைகளை அளந்துக் கொண்டிருந்த எங்களுக்கு, சொன்ன நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் வந்து சேர்கிறது அலைபேசி அலறல்.
"என்னப்பா எங்க இருக்கீங்க ?" - அந்தப் பக்க குரல்
"வந்துக் கொண்டே இருக்கோம் பா" - இது நான்
நேரம் - இரவு / விடியல் - 2.20AM
கொட்டும் மழையில் நனையும் பூப்போல, இந்த பாச மழையில் நனைந்து நிறைகிறது என் உள்ளம்..
அங்க இங்க பாதையை புடிச்சு டீ குடிக்கும் மனசு அலையும் விடியல் நேரம் ஹோட்டலுக்குள் தஞ்சம் புகுந்த எங்களின் கண்கள் ஓய்விற்கு செல்ல, கைகளும் கால்களும் எனக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை என்று தனியே பாய்விரித்தது...
வெயில் எழுப்பியது என்னை..
அலைபேசியில் செய்தி " எழுந்தவுடன் கூப்பிடு"
எழுந்துவிட்டேன், படித்துவிட்டேன், அழைக்கிறேன்..
"வினோபா, என்னயா இப்போவே எழுந்திருச்சாச்சா?"
"ஆமாம்பா"
"எத்தனை மணிக்கு வரட்டும்?"
"ஒரு ஒன்பது மணிக்கு ரெடி ஆயிருவேன்"
"சரிப்பா வரேன்"
குளித்துவிட்டு வெளியே வருகிறேன்.. சட்டைய தேடிக் கொண்டிருக்கிறேன், வாசல் மணி அழைக்க,
அவர் குரல் உள்ளிருக்கும் காற்றுடன் கலைகிறது..
"வினோ"
"இதோ வரேன்ப்பா"
ஒல்லியான உருவம், ஒரு T-Shirt, Jeans, அவ்வளவே..
இதழில் புன்னகை, மனதில் அமைதி, கரம் விரித்துக்கொண்டே வருகிறார்..
அழகிய தமிழ் மணக்கும் கொங்கு நாடான கோவையில், குளிரின் அரவணைப்பில் தவழும் ஒரு குட்டி போத்தனூரில் வாழ்க்கையை தொடங்கிவன் நான்...
பள்ளி பருவத்திலிருந்தே கலைகளில் நாட்டம் கொண்ட எனக்கு தீனி போட்டது கல்லூரி. கனவுகள் ஆயிரம் காண் என்றும் திரிந்தவனுக்கு நெகிழ்வுகள் ஆயிரம் அள்ளி தெளித்தது நட்பு... படிப்பின் மீது கவனம் சிறிதளவில் இருந்தாலும், கூத்து, கிறுக்கல்களின் மீது அதிகம் இருந்தது. இதில் விளைந்ததுவே அகலவியலா நட்புகள். அதனுடே வளர்ந்ததுவே வாழ்க்கை தேவைகளின் மீதான காதலும். என்ன தான் நாட்டுப்பற்றும் ஊரின் மீது பிடிப்பும் வலுவாக இருந்தாலும், என் காலங்களில் பல பேர் விதைத்த வெளிநாட்டு மோகம் இல்லாமலும் இல்லை. ஆம், நான் கண்ட கனவு காட்சிகள் எல்லாம் கணினி வழியாக மனதில் குடி கொண்டன... உலா வந்து கனவுகளில் ஒன்று தான் அனைவரையும் கவரும் வெள்ளை திரள்களில் கால் புதைய நடந்து, ஓடி, ஆடி, விளையாடும் தருணங்கள். இதோ இனி முதல் பனி பாகம் 1 (அப்பாட முன்னுரையே இவ்வளவா? ) அட இதுக்கு மேல இப்போ ஒன்னும் இல்லைங்க.. வாங்க என் சந்தோசங்களை புகைப்படங்கள் மூலமா...
பெரிய வெள்ளை புறா சிறகு விரித்தால்
கொட்டும் பனி மழை - 1
நனையும் மரங்கள்
என் வீட்டு சன்னல் வழியாக
கொட்டும் பனி மழை - 2
கொட்டும் பனி மழை - 3
மூன்றாம் தளத்திலிருந்து - 1
மூன்றாம் தளத்திலிருந்து - தரை...
போர்வை போர்த்திய வீடுகள் -1
(மூன்றாம் தளத்திலிருந்து )
போர்வை போர்த்திய வீடுகள் -2
(மூன்றாம் தளத்திலிருந்து )
எங்கோ ஓர் இடத்தில் வெளிச்சம் என்றும் இருக்கும்...
யாழின் கொண்டாட்டம்...
இந்த புகைப்படங்கள் அனைத்தும் என் அலைபேசி மூலம் எடுக்கப்பட்டது.
பத்துபாட்டு அதுவும் பெண்மனசை பெண்குரலில் வெளிப்படுத்தும் கானம் எழுத என்னை அழைத்த நீரோடை மலிக்கா மற்றும் கலியுகம் தினேஷ்குமார் அவர்களுக்கு என் நன்றிகள்....
சில முடிச்சுகள் அங்கு அவிழ்க்கப்பட்டுக் கொண்டிருந்தன.
எங்கோ என்றோ பதியப் பட்ட வரலாற்றின் புரை ஏறும் அன்பின் கிளைகள் இங்கு இணைத்து கொண்டன..
சுயம் தேடும் பறவையும்., அதன் தோள் சாயும் குயிலும்... மாலை மங்கி சரியத் தொடங்கிய ஓர் இரவில்..... எதிர்பார்க்கா ஒரு பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது.... சொன்னபடி இல்லாமல் முப்பது நிமிடங்கள் முன்னரே வந்து சேர்கிறது நிலவு....
மெல்ல மெல்ல இருள் கவ்வுகிற வேளையில், இங்க இவர்களுக்குள் ஒளி பரவ ஆரம்பிக்கிறது.. ஆம் ஓர் இனம் புரியா நட்பொளி....
****************************************************************** வட மேற்கு திசையில் ஓர் குடிசையிலும், மத்திய கிழக்கில் ஒரு மண் வீட்டிலும், ஒளியும் ஒலியும் உள்ளங்களை இணைத்துக் கொண்டிருக்கிறது. பறவை "சொல்லுங்க" என்கிறது..! நிலா "நலமா" என்று புன்னகைக்கிறது, பதில் குயில் பாடுகிறது.........!! ******************************************************************
தொடங்கிய குரலில் மற்றொன்று முடிக்க, அதை இன்னொன்று எடுக்க நிமிடங்கள் செத்துக் கொண்டிருந்தது மூளையில் முளைக்கவில்லை...
குடும்பம் என்பான், கவிதை என்பான், கதை என்பான், நடை என்பான், வகை என்பான்.. அங்கங்கே நேசன் எட்டிப்பார்க்கிறார், பா ரா பாசம் பொழிகிறார், கடல் புறாவும் சிவாஜியும் சிறகுகள் விரிக்கின்றனர். இவைகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன முன்று உயிர்கள்...
மணி நள்ளிரவை தாண்டி வேகம் பிடிக்கறது.
தோள் சாயும் குயிலுக்கு அங்கே விடிகிறது இருபத்தி ஆறாவது முறையாக அவர் உலகினை கண்ட தினம்...
அடடா என்ன ஒரு அழகிய தருணம்.. முதன் முதலில் இணைகிற மனங்கள், ஆயிரம் ஆயிரம் நிமிடகள் பழகிய உணர்வுகள், இவை அனைத்தின் ஒரு துள்ளலில் வழிகிறது வாழ்த்து... பிறந்த நாள் வாழ்த்து..
****************************************************************** ஒரு பக்கம் குயில்கள் நிக்கோடின் புகைகளுக்கு உயிரை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.. புகைகளும் புன்னகைகளும் ஒன்று ஒன்று சேர., இந்த பக்கம் நிலவுக்கு புரையேறிக் கொண்டிருந்தது ஆனந்தத்தில்.. ******************************************************************
தினம் தினம் நடக்கும், புழங்கும், பழகும், கடக்கும் பல தரப்பட்ட விசயங்களில் ஊட நம் வாழ்க்கை. முக்கிய விசயங்களான வீடும், சமையல் என்ற பெயரில் நான் அடிக்கும் கூத்துமே இந்த பதிவு...
நான் இப்போ குடிபுகுந்திருக்கிற வீடு, 64 வீடுகள் கொண்ட நாலு அடுக்கு மாடி கட்டிடத்தில் முதல் மாடியில் உள்ளது... கட்டிடத்தின் பின்புறம் மரத்திலான அழகான நடைமேடை, குட்டி குட்டி பூந்தோட்டம், குழந்தைகள் (என்னை மாதிரி) துள்ளி திரிந்து சிறகு விரிக்க விசாலமான இடம், வண்டிகளுக்கு தனி இடம் என்று சகல வசதிகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் குடியிருப்பு. அதில், ஒரு படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டை என்னை நம்பி ஒப்படைத்திருக்கிறார் வீட்டின் முதலாளி (அவருக்கு கொஞ்சம் நிறைய தைரியம்... என்ன பண்ண).
வாங்க வீட்டைச் சுற்றிப்பார்க்கலாம்..
ஒரு சாயலில் Studio Apartment முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரவேற்பறையும், சமையலறையும், சாப்பிடும் இடமும் ஒரே அறையில் தடுப்பு இல்லாமல் சேர்ந்தாற்ப் போலவும், மற்ற அறைகள் தனித்தனியே அமைந்துள்ளது. இந்த மாதிரி வடிவமைப்பு எனக்குப் புதுசு...
சன்னல் இடை
சில்லென காத்து
சின்ன பயல பாத்து
சிங்கார பாட்டு
சிற்றோடை மனசு
சீட்டாட்டம் போடுதே!
நீங்களே பாருங்க சன்னல் வழியே... ஆமாங்க, இந்த பதிவுக்கு விதையே இந்த பெரிய கண்ணாடி சன்னல் தாங்க... எழில் கொஞ்சும் அந்த வரப்பிரசாதத்தை. விழிகளில் தவழும் இயற்கையின் புன்னகைகளை என்னின் ஒவ்வொரு அணுவிற்கும் புகட்டிக் கொண்டிருக்கும் கவிதைகளே இந்த சன்னல்......
மெலிதாய் தன் பின்னிடையைக் காட்டும் வீடுகள், அதையும் தாண்டி தன் வனப்பை வளித்து படுத்துக்கொண்டிருக்கும் மலை, அதனை பச்சை வண்ண பட்டுத் துணியால் போர்த்தியது போன்ற பசுமை நிறைந்த காடுகள்... விழிகளை கொள்ளைக் கொள்ளும் பரிசுகள்...
அங்கிருந்து பார்த்தால், தனிமையில் அமர்ந்திருக்கும் மரபெஞ்ச் நமக்குப் பல கவிதைகளை கொட்டும்... மழை குடிக்கொண்டிருக்கும் நாட்களில் சன்னல் கண்ணாடிகளில் வலம் வரும் துளிகளில் பயணிக்கிறது மனசு...
அது ஒரு கார் காலம் கண்ணே...
தனிமையொத்த நிமிடங்களில் சன்னலில் தலை சாய்ந்துக் கொண்டிருக்கிறது மனசு...
அப்படியே இந்த பதிவை படிக்கும் மனதோடும் உறவாடிக் கொண்டிருக்கிறது..
கடலோர நடை பயணத்தின் முதல் நடை மிக நீளமான அருமையான உணர்வாக அமைந்தது. இந்த இரண்டாவது பயணம் கொஞ்சம் வித்தியாசமானப் பயணம். எப்படீன்னு நீங்க கேட்கிறது புரியுது.
வாங்க நாம நடக்கலாம்...
போன ஞாயிறு Portrush என்கிற ஊர்ல, விமானக் கண்காட்சி நடந்தது. அதுக்கு போக முடிவு செய்தோம்.
காலையில் 9.40க்கு புகைவண்டி. கொஞ்சம் கூட பொறுப்பில்லாம 9.10க்கு வரைக்கும் நான் கிளம்பல. அவசர அவசரமா கிளம்பிப் போனா! வண்டி வர சிலநிமிடங்கள் இருந்தது. அப்ப தான் தோணிச்சு, கையில இருக்கிற காசு பயணச்சீட்டுக்குபத்துமா? பத்தாதான்னு?. சரி, ரிஸ்க்க ரஸ்க்கா சாப்பிடுற பரம்பர இல்லையா, வண்டியில ஏறியாச்சு. அடுத்த நிறுத்தத்தில், வேற வண்டி மாறனும் அப்படின்னுசொன்னங்க. சரி கிடச்ச gapla காசு எடுக்க ஓடினேன். ஒலிம்பிக் தங்க மெடல்வாங்கிற வேகம். பாதி தூரம் போகும் போது தான் பார்த்தேன், வண்டி கிளம்ப மணி ஆச்சுன்னு. நம்ம நண்பர் வேற என்னை அழைபேசியில் தேடுகிறார்.பின்ன என்ன பண்ண, ரெண்டு மெடல் வாங்க அது விட வேகமா வண்டிக்குவரதுக்குள்ள என் வயற்றில் இருந்ததெல்லாம் வாய்வழி எட்டிபார்க்க துடிச்சுது.
அப்புறம் காசு போதுமானதா இருந்தது. அங்க போனா, கண்காட்சி கண்றாவியை விட கன்றாவியா இருந்தது. நம்ம ஊர்ல நடக்கிறதே நல்லா இருக்கும்.
அதனால, அங்கிருந்து Londonderryக்கு போலாமுன்னு முடிவு. இங்க தாங்க நம்ம பயணம் தொடங்குது.
Portrushலிருந்து Londonderryக்கு சுமார் 75 நிமிடங்கள் பயணம்.
இயற்கை நமக்குத் தரும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது இல்லையா? போகும் வழியின் இருபுறமும் என்னை இழுத்து போட்டு மனசில் படம் பிடிக்க வைத்தது இயற்கை.
ஒரு பக்கம் பச்சை பசேலுன்னு வயல்கள், விதைகளுக்குகாத்திருக்கும் வயல்கள்.
இன்னொரு பக்கம் கடலும் அதன் மணலும் எங்க எந்தஇடத்தில் பின்னிக் கொள்கிறது என்று தெரியாத அளவிற்கு அப்படி ஒரு அற்புதமான பினைவுக் காட்சி.
விழி வழி விருந்து உட்கொண்டே போனது மனசு.
நம்ம ஊட்டி மலை புகை வண்டி பாதையில குகைகள் வருமே அந்த மாதிரி இந்தபாதையிலும் மூன்று குகைகள். குகைகளுக்குள்ள என்ன அழகுனா,இந்த பக்கம்நம்மளோட பயணிக்கும் கடல், இருங்க நான் வந்திடுறேன்னு சில வினாடிகள் ஓய்வு எடுக்க மறைந்து போகும் உணர்வு.
இன்னொரு அழகும். நானும் உங்களை வரவேற்க தயார இருக்கிறேன்னு சொல்ல இருண்ட மேகங்களை பிழிய காத்திருந்தது வானம்.
இப்போ Londonderry பற்றி
Northern Ireland எல்லை பகுதியில் இருக்கும் அழகோவியம். இதை தாண்டினால் Ireland வந்துவிடும்.
அடர்த்தியான வீடுகள், குறுகிய சாலைகள், மேற்கத்திய நகரங்களுக்கே உரிய நகர் அமைப்பு. கடலை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் உலக வரைப்படத்தில் ஒரு குட்டிப் புள்ளி.
இந்த ஊரை சுற்றி கோட்டை மதில் சுவர் கட்டி இருக்குங்க. சுமார் 2kms சுற்றளவு. நகரின் மையப் பகுதிகளை சுற்றி கட்டப்பட்டுள்ளது.நாங்க சுமார்ஒரு மணி நேரம்புகைப்படங்களுக்கு தீனி போட்டுக் கொண்டே சுற்றி வந்தோம். இந்த மதில் சுவரை சுற்றி வருவதே ஒரு காதல் வயப்படும் உணர்வு. எத்தனை எத்தனைமனிதர்கள்? இளையவர்கள் முதல் வயதானவர்கள் வரை, அன்பை காட்ட ஒரு அருமையானஇடம்.
இயற்கை அன்னை எனக்களித்த அமிர்தத்தின் ஒரு துளியை புகைபடங்கள் வழியே புசித்துக் கொண்டே நடந்தோம். மாலை வேளையில் வானம் மெல்ல தன் அன்பு துளிகளை தூவ.. அற்புத விடியல்கள் ஒவ்வொரு துளிகளிலும்...
ஒரு நதிக்கரையோரம் பறக்க சிறகு விரித்தது மனசு. அதனுடன் நடக்க தயாரானது கால்கள்.
நீல மங்கை கைகோர்த்து நடந்து பழக கற்றுக்கொடுத்து, கூட நடந்த தருணங்கள்.. இவையே இனி...
இங்கிருந்து (Belfast) சுமார் 20 கீ.மீ. தூரம் போனால் ஒரு சின்ன தீவு மாதிரியானஊரு (Bangor). அங்கே தாங்க இந்த நடைப்பயணம்.. Bangor பற்றி அடுத்த பத்தியில் பார்ப்போம். ..
இப்போ அங்கே போன அனுபவத்தை..
திங்கள் காலை சுமார் 10.30 மணிக்கு புகை வண்டிப் பிடித்தோம்..
ஒரு மணி நேர பயணம். நம்ம ஊரு பேரூந்து மாதிரி, வண்டியில் ஏறிய பின் தான் பயணச்சீட்டு வாங்க முடியும். ஏன்னா இங்கே ஏறிய நிலையத்தில் யாரும் இருக்க மாட்டாங்க.ஏதும் இல்லை நடைமேடைத் தவிர. ஒரு நாள் பயணச்சீட்டு வாங்கிட்டு வண்டியில்அமர்ந்தோம்.. என்ன அருமையான வண்டி… நம்ம ஊரு மூன்றாம் ஏ சி கூடஇப்படி இல்லைங்க. சுத்தம், பஞ்சு இருக்கைகள், சத்தம் இல்லா , ஆட்டம்இல்லா பயணம்.. அப்படியே இயற்கையை ரசிச்சிக்கிட்டுப் போனோம்.. வழிமுழுவதும் கடலோரமா தான் போனது வண்டி.
Bangor ஒரு சின்ன தீவு மாதிரியான ஊர். சொகுசு படகுகள் வாங்கிவிடுமுறைகளை பொழுது கழிக்கும் மக்களும், அவர்களின் படகுகளும் காலம்போக்கும் இடம். அழகிய இடம்..
Bangorல் இருந்து ஒரு 6கீ.மீ.கடலோர சுத்தமான நடைபாதை, எந்த சத்தமும் இல்லை, கடலின் இசையைத் தவிர..
காலையில சரியா சாப்பிடலை.. அதனால கொஞ்சமா ( ஒரு முழு ப்ரைய்டு கோழி, 18 சிப்ஸ் பாக்கெட்ஸ், இப்படி ஒரு 2000 ரூபாய்க்கு) சாப்பிட வாங்கிட்டுநடக்க ஆரம்பிச்சோம்...
இங்க நம்ம நண்பர் சூரியன் பற்றியும் சொல்லணும். அவருக்கு என்ன தோணிச்சோ, மக்க நாள் முழூவதும் எங்களுக்கு உடம்பு சுடாத தரிசனம் தந்தாரு. அதனால வருண பகவானுக்கு Holiday.
பல வகை படகுகள் வளம் வருவதை பார்க்கும் அழகே அழகு. கால் நனைக்கும் வயதான மனிதர்கள், துள்ளி குதிக்கும் இரண்டு வயது குட்டி பாப்பா, தனிமைவிரூம்பிகள், காதல் கதை பேசும் ஜோடிகள், தன் குழந்தையை வயிற்றில் சுமக்கும்பெண், துடுப்பு படகு ஓட்டும் சின்ன பெண், அவளை ஆர்வத்துடன் பார்க்கும்அப்பா, கொஞ்சம் கவலையுடன் பார்க்கும் அம்மான்னு, இப்படிப் பல காட்சிகளுடன், பலதரப்பட்ட முகங்களுடன் எங்கள் நடை.....
இதுல ஒரு விஷேசம்... அனைவரும் வணக்கமும், புன்னகையும் நமக்கு தந்து விட்டுத் தான் போவார்கள்.. எத்தனை எத்தனை புன்னகைகள். இதுவல்லவோஎங்கள் சத்து 6 கீ.மீ.நடைக்கு..
இன்னொரு விஷயம்.. எத்தனை விதமான மனிதர்களைப் பார்க்க முடிகிறதோ, அத்தனை விதமான செல்ல பிராணிகளையும் பார்க்கலாம்.. அனைத்தும் நல்ல பயிற்சி பெற்றவை.. (எதுவும் செய்யல எங்களை).
வசீகரம் குறையா கன்னிப் பாவையின் அத்தனை நளினங்களும் தந்தாள் இந்த நீல மங்கை எங்கள் நடை பயணத்தில்.. வளைந்து, நெளிந்து, நின்று, நிமிர்ந்து, ஏறி, இறங்கி, குலுங்கி, குறுகி, இப்படி பலப் பல நளினங்கள்.. எங்களுக்கு விருந்து படைத்தாள் தண்ணீர் அரசி ..
ஆட்டம், பாட்டம், ஓட்டம், நடை, களைப்பு, தூக்கம், சிரிப்பு, கைதட்டல் இப்படி மாறி மாறி பொழிந்த வண்ணம் தொடர்ந்தது எங்கள் பயணம்..
******************************************* திக்கற்ற திசை நம்பி வாழ் நீளக் கரம்... *******************************************
பதின்மத்தில் மூளையில் முளைக்கும் இளமையின் வேட்கையின் முதல் படி. நேசத்தின் அளவுகோளின் உயரம் சற்றே தடுமாறிப் போகும் கணங்களில் பிடித்து தட்டி நிறுத்தும் கரங்களுக்கு வாழ்வை ஒப்படைத்து நாட்கள் நகருகின்றன.
ஈராறு வருடங்களுக்கு பின்னோக்கி பயணக்கிறது நினைவுகள். கல்லூரி மண் மிதித்து சில இடர்களைத் தாண்டி மெல்ல எழுந்த எட்டுதிசையின் புள்ளிகளில் மணக்கிறது எங்கள் கோலம்.
******************************************* ஏழல்ல எட்டு நாம் சேர திரியும் வில்... *******************************************
இனம் அறிந்து மொழி புரிந்து இணைகிற உள்ளங்கள். உள்புகு மென்மையை வருடிச் செல்லும் நிகழ்வுகள். நிஜங்களின் அருகாமையில் பிணைகிறது ஒரு இசை. இசையில் நுகர்கிறோம்.
கானகத்தில் கடுங்குளிரும் பெரும் மழையும் மாறிப் பொழியும் பொழுதுகளுக்கு நடுவில் வசந்தங்களின் அரவனைப்புகளும் தழுவக் கண்டோம்.
பேருந்து பயணம், வீதியோர நடை, வயல்வரப்பு அமர்வு, தாகம் தணிக்கும் ஓடை, தோள் சாய தோழி, வளரும் பாசம்.
கனவுகள் பல கவிதைகள் பல கனத்து கரைந்து போகும் தருணங்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவன், நான் அப்பா என்கிறான். அட, அவள் நானும் அம்மா என்கிறாள். அடடா, இப்போ நானும் அப்பா...
******************************************* காலம் நடை வயது விடை கனியும் உறவு... *******************************************
இந்திய ஆட்சிப்பணியில் சேர்வதற்காக செ.உமாசங்கர், தனது இருப்பிடம், மதம் ஆகியவற்றை மாற்றி ஆதி திராவிட இனத்தைச் சார்ந்தவர் என்று தவறான சாதிச் சான்றிதழ் பெற்றுள்ளார் என்ற புகார்களின் அடிப்படையிலும், அவர் படித்த பள்ளி, கல்லூரி, தேர்வு இயக்ககம் மற்றும் தொடர்புடைய அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், அனைத்திந்திய ஆட்சிப் பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1969-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் இவர் தொடர்ந்து பணியில் நீடிப்பது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்பதாலும், இதுதொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை மற்றும் உரிய அமைப்பின் மூலம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாலும் உமா சங்கர், அரசால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
என் கண்டனங்கள்
உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.
அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.